இந்தியா

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காரில் சிக்கிய இருவர் மீட்பு

webteam

உத்தராகண்ட் மாநிலத் தலைநகர் டேராடூனில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காரில் சிக்கிய இருவர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. நலபானி என்ற பகுதியில் ஒரு கார் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் விரைந்து செயல்பட்டு காரில் இருந்த இருவரை மீட்டனர்.