இந்தியா

நீதிபதி ரமணா அமர்வில் ப.சிதம்பரம் தரப்பு மீண்டும் முறையீடு

webteam

முன் ஜாமின் கோரி உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா அமர்வில் மீண்டும் முறையிட ப.சிதம்பரம் தரப்பு முடிவு செய்துள்ளது. 

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ மும்முரம் காட்டி வருகிறது. ஆனால் முன் ஜாமின் கோரி ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ரமணா முன்பு விசாரணைக்கு வந்தது. ஆனால் அவர் உத்தரவு பிறப்பிக்க மறுப்பு தெரிவித்து விட்டார். 

மேலும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரிக்கும் எனவும் பரிந்துரைத்தார். ஆனால் அயோத்தி வழக்கை விசாரித்து வருவதால் உடனடியாக முன் ஜாமின் மனுவை விசாரிக்க முடியாது என தலைமை நீதிபதியும் மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையில் இந்த மனு விசாரணைக்கு வரும் எனக் கூறப்பட்டது. 

இந்நிலையில், முன் ஜாமின் கோரி உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா அமர்வில் மீண்டும் முறையிட ப.சிதம்பரம் தரப்பு முடிவு செய்துள்ளது.