இந்தியா

பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு - குழு அமைத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு

Veeramani

பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு விவகாரம் தொடர்பாக குழு அமைத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

பஞ்சாபில் பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவின் விசாரணை இன்று நடைபெற்றது. இதில் மத்திய அரசு மற்றும் பஞ்சாப் அரசின் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து இதுகுறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் குழு அமைக்கும் முடிவை எடுத்துள்ளது.

பிரதமர் மோடி பஞ்சாப் சென்றிருந்தபோது பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டிருந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.