இந்தியா

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்படவேண்டும்: குஷ்பு

Sinekadhara

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்று நடிகை குஷ்பு ட்வீட் செய்துள்ளார்.

அந்த ட்வீட்டில் ’’தமிழகமோ, உ.பி.யோ அல்லது எந்தவொரு மாநிலமாக இருந்தாலும் ஒரு பெண் மீதான பாலியல் வன்கொடுமையை அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பார்க்க வேண்டும்; குற்றவாளிகள் தண்டிக்கப்பட எந்த ஒரு கருணையும் காட்டாமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையிலும் அல்லது உ.பி பாலியல் வன்கொடுமையிலும் ஒரு பெண்ணின் கண்ணியம் சூறையாடப்பட்டு வாழ்க்கைமீது பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.