இந்தியா

கேரள விமான விபத்து: மீட்புப்பணியில் ஈடுபட்டவர்களை தனிப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்

Veeramani

கேரள விமானவிபத்தில் இருந்து மீட்கப்பட்ட இருவருக்கு கொரோனா தொற்று உறுதியான காரணத்தால், மீட்புப்பணியில் ஈடுபட்ட சிஐஎஸ்எஃப் வீரர்கள் அனைவரையும் தனிமைப்படுத்திக்கொள்ள உத்தரவிட்டுள்ளது சிஐஎஸ்எஃப் நிர்வாகம்.

“காயமடைந்த இரண்டு நபர்களுக்கு கொரோனாத்தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்ததையடுத்து, மீட்புப்பணியில் பங்கேற்ற அனைத்து சிஐஎஸ்எஃப் பணியாளர்களையும் தனிமைப்படுத்துதலுக்கு செல்லுமாறு நாங்கள் கேட்டுள்ளோம். முன்னதாக மீட்புப்பணிகளை மேற்கொண்ட உள்ளூர் மக்களையும் தனிமைப்படுத்தலுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொண்டு்ள்ளோம்” என்று விமானநிலைய மூத்தஅதிகாரி ஒருவர் தெரிவித்தார்.