இந்தியா

புத்தாண்டு பம்பர் லாட்டரி: ரூ.12 கோடி பரிசு வென்ற கேரள தொழிலாளி

நிவேதா ஜெகராஜா

புத்தாண்டு பம்பர் லாட்டரியில் கேரளாவைச் சேர்ந்த தொழிலாளிக்கு 12 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.

லாட்டரி குலுக்கல் நடைபெறும் சில மணி நேரம் முன்பாக, கோட்டயத்தைச் சேர்ந்த வர்ணம் தீட்டும் தொழிலாளி சதானந்தன் என்பவர் விற்பனையாளரிடமிருந்து கிறிஸ்துமஸ், புத்தாண்டு பம்பர் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார். இதையடுத்து நடைபெற்ற குலுக்கலில் சதானந்தன் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 12 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. இந்த பரிசுத் தொகையை தனது பிள்ளைகளுக்கு தர உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.