இந்தியா

முல்லை பெரியாறு அணையை பலப்படுத்த தமிழகத்துக்கு கேரளா ஒத்துழைக்க வேண்டும்: மத்திய அரசு

Veeramani

முல்லைப் பெரியாறு அணையை மேலும் பலப்படுத்த தமிழ்நாடு அரசு முன்வைத்துள்ள பரிந்துரைகளுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேரள அரசை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

முல்லை பெரியாறு அணையில் நீரைத் தேக்கி வைப்பது தொடர்பாகவும், அணையின் பாதுகாப்பு குறித்தும் மத்திய நீர்வளத்துறை அமைச்சக இணைச் செயலாளர் சஞ்சய் அவஸ்தி, கேரள அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் முல்லை பெரியாறு அணை மற்றும் அதன் நீர்மட்டத்தை தொடர்ந்து மேற்பார்வை குழு தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மக்களின் பாதுகாப்பு சம்பந்தமான விஷயங்களில் எவ்வித சமரசமும் செய்துகொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முல்லை பெரியாறு அணையை பலப்படுத்தும் வகையில் பேபி அணையை வலுப்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசின் கோரிக்கையை கேரள அரசு ஏற்று உரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என மத்திய நீர்வளத்துறை அமைச்சக இணைச் செயலாளர் சஞ்சய் அவஸ்தி கேட்டுக்கொண்டுள்ளார்.