இந்தியா

முல்லைப் பெரியாறு அணை: கேரள அரசின் முடிவால் தமிழ்நாடு விவசாயிகள் அதிர்ச்சி

Sinekadhara

முல்லைப்பெரியாறு அணையை கண்காணிக்க கேரளா அரசு தனி செயற்பொறியாளரை நியமனம் செய்ய முடிவு செய்துள்ளது. அம்மாநில நீர்பாசனத்துறை அமைச்சர் ரோஸி அகஸ்டினின் கோரிக்கையை ஏற்று, கேரள அரசு இந்த நியமனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இதனால் தமிழ்நாட்டு விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர். தமிழ்நாடு பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அணையின் உரிமையில், கேரளா தலையிடுவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கேரளாவின் இந்த செயலுக்கு தமிழ்நாடு அரசு உரிய தீர்வு காணவேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.