இந்தியா

கேரளா: நாயின் நகைப்புக்குரிய செயல் - அப்படி என்ன செய்தது?

webteam

கேரளாவில் உரிமையாளர் பாடும் சங்கீத ஒலிக்கு ஏற்ப நாயும் ஒலி எழுப்பும் வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

கேரளா மாநிலம் வர்க்கலா பகுதியைச் சேர்ந்தவர் சங்கீத் ஜெயன். இவர், தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அந்த நாய் சங்கீத் ஜெயனுடன் மேஜையில் அமர்ந்து அவர் பாடும் சங்கீத ஒலிக்கு ஏற்ப அதுவும் ஒலி எழுப்புகிறது.

இதை குடும்பத்தினர் வீடியோவாக பதிவு செய்து அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றிய நிலையில், தற்போது இந்த வீடியோ காட்சிகள் வேகமாக வைரலாகி வருகிறது.