இந்தியா

காஷ்மீர் பனிச்சரிவு: மேலும் ஒரு தமிழக ராணுவ வீரர் உயிரிழப்பு

webteam

காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்த கண்ணன் என்ற ராணுவ வீரர் உயிரிழந்தார். இதன் மூலம் உயிரிழந்த தமிழக வீரர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. குரேஷ் பகுதியில் இருந்த ராணுவ முகாம்கள் பனிச்சரிவில் சிக்கி முற்றிலும் புதைந்தது. இதில் ஏற்கனவே தமிழக ராணுவ வீரர்கள் இளவரசன், சுந்தரபாண்டி ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பனிச்சரிவில் சிக்கி மேலும் ஒரு தமிழக வீரர் உயிரிழந்துள்ளார்.