இந்தியா

சர்வதேச பயங்கரவாதியான கர்நாடக இளைஞர்!

Rasus

இந்தியாவில் ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆள் எடுத்தவரான கர்நாடக மாநில இளைஞரை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 

கர்நாடக மாநிலம் பாட்கல் நகரைச் சேர்ந்தவர் முகமது ‌ஷபி அர்மர் (30). இவர், இந்தியாவில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு ஆட்களை தேர்வு செய்ததாகக் கூறப்படுகிறது. டெல்லி, ஹரித்துவார், கும்பமேளாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக தேசிய புலனாய்வு அமைப்பு இவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் முகமது ‌ஷபி அர்மர், தன் சகோதரருடன் பாகிஸ்தானுக்கு சென்றார். அங்கு தலைமறைவாக இருந்து வருகிறார். அவரை பிடிக்க சர்வதேச போலீஸ் மூலம் பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸ் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அவரை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்துள்ளது.