இந்தியா

மேகதாது அணை கட்டும் முடிவை கர்நாடகா கைவிட வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

EllusamyKarthik

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் முடிவை கர்நாடக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கர்நாடக முதல்வரின் தன்னிச்சையான முடிவு இரு மாநில நல்லுறவுக்கு உகந்தது அல்ல என தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். எடியூரப்பா இப்படி தன்னிச்சையாக செயல்படுவது கண்டனத்திற்குறியது என முதல்வர் தெரிவித்துள்ளார். 

"காவிரியில் புதிய அணை கட்டும் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ள போது ஒன்றிய அரசு அனுமதி அளித்ததும் அணை கட்டப்போவதாக சொல்வது கண்டனத்திற்குறியது. அந்த மாநில முதல்வரின் அறிவிப்பு தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு விவசாயிகளையும் வஞ்சிக்க முயற்சிக்கும் செயலாகும்" என முதல்வர் தெரிவித்துள்ளார்.