இந்தியா

கர்நாடகா: ஆற்றில் தவறிவிழுந்த 2-ஆம் வகுப்பு மாணவி – தீவிரமாக தேடும் தீயணைப்பு படை

webteam

உடுப்பி மாவட்டம் பைந்தூர் தாலுகா அருகே நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய 2-ஆம் வகுப்பு மாணவி மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்து மழைவெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பொலம்பள்ளி மக்கிமனே பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரதீப் பூஜாரி - சுமித்ரா தம்பதியர். இவர்களது ஏழு வயது மகள் சன்னிதி சப்பரிக்கையில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில், நேற்று மாலை சன்னிதி, பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது, பீஜமக்கியில் உள்ள மேம்பாலத்தில் இருந்து ஆற்றில் தவறி விழுந்துள்ளார்.

இதையடுத்து சிறுமி தவறி விழுந்ததை அறிந்த பொதுமக்கள் திரண்டு வந்து சிறுமியை தேடினர். இருப்பினும் பொல்லம்பள்ளி ஆற்றின் வெள்ளத்தில் மாணவி அடித்துச் செல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பைந்தூர் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் மாணவியை தேடி வருகிறார்கள்.