இந்தியா

காரைக்கால்: துணி வாங்குவதுபோல் நடித்து திருட்டில் ஈடுபட்ட இரு பெண்கள் கைது

kaleelrahman

காரைக்காலில் ஜவுளிக் கடையில் துணிகளை திருடி கைவரிசை காட்டிய இரு பெண்கள் கையும் களவுமாக சிக்கினார்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் பாரதியார் சாலையில் பிரபல ஜவுளிக்கடை ஒன்றில் இரு பெண்கள் ஜவுளி கடையில் துணி வாங்குவது போல் நடித்து ஏமாற்றி வந்தனர் இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் அவர்களை கண்காணிக்கத் தொடங்கினார்.

அப்போது இரு பெண்களும் சுடிதார் பண்டல்களை எடுத்து ஆடைக்குள் மறைத்துச் செல்ல முயன்றுள்ளனர் இதனையடுத்து கடை ஊழியர்கள் அவர்களை கையும் களவுமாக பிடித்து காரைக்கால் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த குறிஞ்சிப்பாடி பகுதியில் வசித்து வரும் மலர் (40) மற்றும் உஷா (50) ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து இவர்களை கைது செய்து மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுச்சேரி மத்திய சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் விசாரணையில் இவர்கள் மீது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட வழக்கு நிலுவையில் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.