டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கட்டண உயர்வை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்கள் மற்றும் காவல்துறையினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கல்விக் கட்டணம், விடுதி கட்டணம் ஆகியவை அதிகளவில் உயர்த்தப் பட்டிருப்பதாகவும் ஆடைக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதாகவும் மாணவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தும் நோக்கில், பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று பட்டமளிப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், விழா நடைபெறவுள்ள அரங்கை நோக்கி மாணவர்கள் பேரணி செல்ல முயன்றனர். அப்போது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். எனினும் தடுப்புகளை தாண்டி மாணவர்கள் சென்றதால், சலசலப்பு ஏற்பட்டது.