இந்தியா

ரூ.400 கோடி இழப்பு: ஏர்டெல் மீது ஜியோ புகார்

Rasus

ஏர்டெல், வோடாஃபோன், ஐடியா ஆகிய நிறுவனங்களால் அரசுக்கு 400 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக இவற்றின் போட்டி நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது. அரசுக்கு செலுத்த வேண்டிய உரிமத் தொகையில் குறைவான அளவையே இவை அளித்துள்ளதாகத் தொலைத்தொடர்பு அமைச்சகத்திடம் ஜியோ புகார் அளித்துள்ளது. எனினும் இக்குற்றச்சாட்டு உள்நோக்கம் கொண்டது என்றும் அரசுக்கு இதனால் இழப்பு ஏதும் இல்லை என்றும் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் சங்கம் விளக்கமளித்துள்ளது.