நடப்பாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் இன்று தொடக்கம். 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு.
பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் வாங்க ஏதுவாக, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு.
புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 750 ரூபாய் ரொக்கப் பரிசு நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு.
விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியின் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து மூன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு. பள்ளியின் தாளாளர் உட்பட மூன்று பேர் கைது.
விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு 3 லட்சம் ரூபாய் நிவாரணம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
சொரிமுத்து ஐயனார் கோயிலில் பக்தர்கள் தங்க தடை விதிக்கலாமே என தாமிரபரணியை தூய்மைப்படுத்த கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி.
திமுக எம்பி கதிர் ஆனந்த் வீட்டில் 11 மணி நேரம் நீடித்த அமலாக்கத் துறை சோதனை நிறைவு. பூட்டியிருந்த 2 அறைகளின் கதவை உடைத்து சோதனை நடத்தியதாக தகவல்.
மதுரையில் தடையை மீறி பேரணி நடத்த முயன்ற குஷ்பு உள்ளிட்ட பாஜகவினர் கைதாகி விடுதலை. கைதானவர்கள் ஆடுகள் அடைக்கப்படும் வளாகத்தில் அடைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு.
ஜனவரி இறுதிக்குள் மாவட்டச் செயலாளர்களை நியமிக்க தவெக தலைவர் விஜய் உத்தரவு. பிப்ரவரியில் படப்பிடிப்பு முடிந்ததும் தமிழகம் முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் திட்டம்.
வைரஸ் தொற்று வேகமாக பரவும் தகவலுக்கு சீனா மறுப்பு. இந்நிலையில், தற்போதைக்கு இந்தியா அச்சம் அடைய தேவையில்லை என்று மத்திய அரசு விளக்கம்.
சிறுவர்கள் சமூக வலைதளக் கணக்கு தொடங்க பெற்றோரின் அனுமதி கட்டாயம் என டிஜிட்டல் தரவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வரைவு விதிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு.
மணிப்பூரில் குக்கி மக்களின் போராட்டத்தின்போது வன்முறை வெடித்ததில்,தமிழகத்தைச் சேர்ந்த காவல் துறை அதிகாரிக்கு தலையில் காயம்.
டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதியை அடுத்த வாரம் அறிவிக்க தேர்தல் ஆணையம் திட்டம். இறுதிக்கட்ட ஆலோசனைகள் நடைபெறுவதாக அதிகாரிகள் தகவல்.
லடாக்கின் சில இடங்களை சேர்த்து 2 புதிய நிர்வாக பகுதிகளை அறிவித்த சீனா. சட்டவிரோதம் என கூறி இந்தியா கடும் கண்டனம்.
சபரிமலையில் மண்டல பூஜை காலத்தில் சுமார் 32 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம். கடந்தாண்டை விட கூடுதலாக 4 லட்சம் பக்தர்கள் வருகை.உண்டியல் வருவாயும் 297 கோடியை கடந்தது.
இஸ்ரேல் மீது புதிய தாக்குதலை நடத்தப் போவதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மிரட்டல். 2 குழுக்களை தயார்படுத்தி இருப்பதாகவும் பகிரங்கமாக அறிவிப்பு.
காஷ்மீரின் லேவில் நடந்த மகளிர் ஐஸ் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில், அடுத்தடுத்து கோல்கள் அடித்து இந்திய ராணுவ அணி வெற்றி.
பிரிஸ்பேன் டென்னிஸ் தொடர் காலிறுதியில் நட்சத்திர வீரர் நோவக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி. தரவரிசையில் 293 ஆவது இடத்தில் உள்ள அமெரிக்க வீரர் ஒப்பல்காவிடம் வீழ்ந்தார்.