இந்தியா

ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: 2 ராணுவ வீரர்கள் உட்பட மூவர் உயிரிழப்பு

webteam

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 2 இந்திய ராணுவ வீரர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்‌மீரின் சோபியான் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு ராணுவ வீரர்கள் உட்பட மூவர் வீர மரணம் அடைந்தனர். இதனிடயே, குல்காமில் இன்று காலை நடந்த துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர். இதில் கடந்த மே 1 ஆம் தேதி 5 காவலர்கள் உள்பட 7 பேரை கொலை செய்த பயங்கரவாதியும் ஒருவர் ஆவார்.