இந்தியா

கேரளா பிளாஸ்டர்ஸ் பங்குகளை விற்கிறார் சச்சின்.?

Rasus

தன் வசமுள்ள கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் பங்குகளை சச்சின் டெண்டுல்கர் விற்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகளில் பங்கேற்கும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியுடன் 2014-ஆம் ஆண்டில் இருந்து இணைந்து இருக்கும் சச்சின் டெண்டுல்கர் தற்போது அதன் பங்குகளை விற்க முடிவு செய்திருப்பதாக தககல் வெளியாகி உள்ளது. இது அந்த அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

கிரிக்கெட் போட்டிகளுக்கு ஐபிஎல் இருப்பதை போல கால்பந்தில் ஐஎஸ்எல் கால்பந்து தொடர் நடத்தப்படுவது உண்டு. இதில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் மொத்த பங்குகளில் 20 விழுக்காடு சச்சின் வசம் உள்ளதாகக் கூறப்படுகிறது.