‘இன்சாட்-3டிஎஸ்’
‘இன்சாட்-3டிஎஸ்’ pt web
இந்தியா

காலநிலை, வானிலை தரவுகளைப்பெற ‘INSAT - 3DS’ செயற்கைக்கோள் - பிப்ரவரியில் விண்ணில் ஏவும் இஸ்ரோ!

PT WEB

இஸ்ரோ 2024 புத்தாண்டில் கடந்த 1-ஆம் தேதி பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டில் ‘எக்ஸ்போசாட்’ என்ற ‘எக்ஸ்-ரே போலரிமீட்டர்’ என்ற செயற்கைக் கோளை பொருத்தி விண்ணில் வெற்றிகரமாக ஏவியது.

இஸ்ரோ

இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி விண்ணில் ஏவிய ஆதித்யா-எல்1 விண்கலத்தை கடந்த 6ஆம் தேதி இந்தியாவின் முதல் சூரிய ஆய் வகத்தை திட்டமிட்ட எல்-1 புள்ளி யில் வெற்றிகரமாக இஸ்ரோ நிலைநிறுத்தியது. இந்த வெற்றிகரமான தொடக்கத்திற்கு பிறகு நடப்பாண்டு 12 திட்டங்களை செயல்படுத்த போவதாக இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இஸ்ரோ தற்போது, ஜி.எஸ்.எல்.வி.-எப்-14 என்ற ராக்கெட்டில் இன்சாட்- -3டிஎஸ் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த தயாராகி வருகிறது. திரவ உந்துசக்தியைப் பயன்படுத்தும் மேம்பட்ட ராக்கெட்டாகும். இதனை வருகிற பிப்ரவரி முதல் வாரத்தில் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது. தற்போது ராக்கெட்டில் செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது.