இந்தியா

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த பிரதமர் மோடியின் சித்தி உயிரிழப்பு!

EllusamyKarthik

பிரதமர் நரேந்திர மோடியின் சித்தி நர்மதாபென் மோடி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு சிகிச்சை பலன் கொடுக்காமல் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 80. 

அந்த நகரில் உள்ள நியூ ராணிப் பகுதியில் தனது பிள்ளைகளுடன் வசித்து வந்தார் நர்மதாபென். இதனை மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி உறுதி செய்துள்ளார். 

“எங்கள் தந்தையின் சகோதரர் காலம் சென்ற ஜக்ஜீவன் தாஸின் மனைவியான  நர்மதாபென் பத்து நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நலன் பாதிக்கப்பட்டதால் மருத்துவ சிகிச்சையில் இருந்தார். இந்நிலையில் அவர் இன்று உயிர் பிரிந்தார்” என தெரிவித்துள்ளார்.