medicine export AI generated image
இந்தியா

ஈரான் போர் | கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத சரிவு.. இந்திய மருந்து ஏற்றுமதி வீழ்ச்சி!

மேற்காசியப் போர், செங்கடல் பாதுகாப்பு நெருக்கடி காரணமாக இந்திய மருந்து ஏற்றுமதி 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளது.

PT WEB

இந்திய மருந்து ஏற்றுமதி மார்ச் மாதத்தில் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. மேற்காசியப் போர், அரசியல் பதற்றம், செங்கடல் பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக கப்பல் தாமதம், காப்பீடு-சரக்குக் கட்டண உயர்வு, சில சந்தைகளில் தற்காலிக தேவை குறைவு ஆகியவை காரணமாகக் கூறப்படுகின்றன. நிபுணர்கள் இதை பின்னடைவு என மதிப்பிடுகின்றனர்.

இந்தியாவின் மருந்துப் பொருட்கள் ஏற்றுமதி, கடந்த மார்ச் மாதத்தில் பெரும் சரிவைக் கண்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த அளவாக இது பதிவாகியுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழல், விநியோகச் சங்கிலியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

container ship at the Strait of Hormuz

செங்கடல் பகுதியில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலால், கப்பல் போக்குவரத்து தாமதமாவதும், காப்பீடு மற்றும் சரக்குக் கட்டணங்கள் அதிகரித்திருப்பதும் ஏற்றுமதியைப் பாதித்துள்ளது. சில முக்கிய சர்வதேச சந்தைகளில் இந்திய மருந்துகளுக்கான தேவை தற்காலிகமாகக் குறைந்திருப்பதும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.

மருந்துத் துறை இந்தியாவின் மிக முக்கியமான ஏற்றுமதி துறைகளில் ஒன்றாகும். கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வந்த இந்தத் துறை, தற்போது சந்தித்துள்ள இந்தச் சரிவு வர்த்தகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இது தற்காலிகமான பின்னடைவுதான் என்றும், நிலைமை சீரானதும் ஏற்றுமதி மீண்டும் வேகம் எடுக்கும் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.

medicines

உலகளாவிய அரசியல் பதற்றங்கள் இந்திய வர்த்தகத்தில், குறிப்பாக மருந்துத் துறையில் நேரடிப் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன என்பதையே மார்ச் மாத ஏற்றுமதி தரவுகள் காட்டுகின்றன.