இந்தியா

"அருணாசல பிரதேசத்தை ஒட்டியும் சீன படைகள் குவிப்பு" - இந்திய கிழக்கு பிராந்திய ராணுவ தளபதி

Sinekadhara

லடாக்கை தொடர்ந்து அருணாச்சலப் பிரதேசத்தை ஒட்டிய எல்லைப்பகுதியிலும் சீனப்படைகளை குவித்து வருவதாக இந்திய ராணுவத்தின் கிழக்கு பிராந்திய தளபதி மனோஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.

அருணாச்சலப் பிரதேச மாநிலம் ருபா என்ற இடத்தில் பேசிய அவர், எல்லைப் பகுதியில் சீன படைகள் குவிக்கப்பட்டு வருவதுடன் பயிற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார். எனினும் எல்லையில் எத்தகைய சூழலையும் சமாளிக்க நமது ராணுவம் தயார் நிலையில் இருப்பதாகவும் முப்படைகளும் இணைந்து தாக்குதல் நடத்தும் புதிய போர் முறைகளை கடைபிடிக்க கொள்கை அளவிலான ஒப்புதல் தரப்பட்டுள்ளதாகவும் தளபதி மனோஜ் பாண்டே தெரிவித்தார். எந்த அவசர சூழலையும் சமாளிக்க எல்லை நெடுகிலும் போதிய படை வீரர்களை நிறுத்தியுள்ளதாகவும் கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சீனாவும் பூடானும் தங்களுக்குள் உள்ள எல்லைப் பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர முயற்சி செய்வதை இந்தியா கூர்ந்து கவனித்து வருவதாகவும் கிழக்கு பிராந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே தெரிவித்தார்.