இந்தியா

`ராணுவ தளவாட ஏற்றுமதி 8 மடங்கு அதிகரித்திருத்திருக்கிறது’- பிரதமர் மோடி பெருமிதம்

webteam

நாட்டின் ராணுவ தளவாட ஏற்றுமதி சில ஆண்டுகளில் 8 மடங்கு அதிகரித்திருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் காந்தி நகரில் பாதுகாப்பு கண்காட்சியை பிரதமர் மோடி நேற்று தொடங்கிவைத்தார். இதன் பின் பேசிய அவர் கடந்த சில ஆண்டுகளில் நாட்டின் ராணுவ தளவாட ஏற்றுமதி 8 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

இந்திய தொழில்நுட்பத்தின் மீது உலக நாடுகள் வைத்திருக்கும் நம்பிக்கையை இது காட்டுவதாக பிரதமர் பேசினார். பாதுகாப்பு சாதனங்கள் உற்பத்தியில் சில நிறுவனங்களின் கடும் போட்டிக்கிடையில்  இந்தியா தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். சுயசார்பு இந்தியா திட்டம் உள்ளிட்ட கொள்கை சார்ந்த நடவடிக்கைகள் இந்த வளர்ச்சிக்கு காரணமாக அமைந்ததாகவும் அவர் கூறினார்.