இந்தியா

அருணாச்சலப் பிரதேச எல்லையில் பீரங்கிகளை குவித்தது இந்தியா!

EllusamyKarthik

இந்தியா மற்றும் சீன நாடுகளின் எல்லை பகுதியான LAC எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே உள்ள அருணாச்சலப் பிரதேச எல்லைப் பகுதியில் இந்தியா பீரங்கிகளை குவித்துள்ளது. தவாங் பகுதியில் இந்தியா மற்றும் சீனா இடையே எல்லைப் பிரச்சனை நீடித்து வரும் நிலையில் பீரங்கிகள் குவிக்கப்பட்டு உள்ளது.

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அருணாச்சல் சென்றதற்கு சீனா ஆட்சேபம் தெரிவித்திருந்தது. சீனாவின் ஆட்சேபத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவித்த நிலையில் பீரங்கிகள் குவிக்கப்பட்டு உள்ளன.