நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்துக்கும் கீழாக குறைந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 70 ஆயிரத்து 421 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை மொத்தமாக 2 கோடியே 95 லட்சத்து 10 ஆயிரத்து 410 ஆக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 501 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 81 லட்சத்து 62 ஆயிரத்து 947 ஆக உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில் இன்று மட்டும் 3 ஆயிரத்து 921 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் மொத்த கொரோனா உயிரிழப்பு 3 லட்சத்து 74 ஆயிரத்து 305 ஆக உள்ளது. 72 நாட்களுக்குப்பிறகு நாட்டில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 10 லட்சத்துக்கு கீழாக குறைந்துள்ளது. தற்போது நாடு முழுவதும் 9 லட்சத்து 73 ஆயிரத்து 158 பேர் சிகிச்சையில் உள்ளனர்.