இந்தியா

“சமரசம் செய்யுமாறு டிரம்பிடம் மோடி கேட்கவில்லை”- ஜெய்சங்கர் விளக்கம்

Rasus

காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்காவை பிரதமர் மோடி கேட்கவில்லை என வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்து வைக்க தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இது தொடர்பாக அமெரிக்காவின் உதவியை இந்திய பிரதமர் மோடி கேட்டதாகவும் டிரம்ப் தெரிவித்திருந்தார். ஆனால் டிரம்ப்பின் உதவியை மோடி ஒரு போதும் கோரவில்லை என வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. அப்போது மாநிலங்களவையில் இதுகுறித்து விளக்கம் அளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்காவை இந்தியா கேட்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்பிடம் பிரதமர் மோடி அதுபோன்ற எந்தவொரு கோரிக்கையும் வைக்கவில்லை எனவும் ஜெய்சங்கர் தெளிவுபடுத்தியுள்ளார்.