இந்தியா

தொடர்ந்து 9-வது முறையாக தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி

சங்கீதா

நாட்டின் 76-ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றினார்.

நாடு சுதந்திரம் அடைந்து நேற்றுடன் 75 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. 76ஆவது சுதந்தின தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக தலைநகர் டெல்லியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்து  மரியாதை செய்தார். பாதுகாப்புப் படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.

அப்போது ஹெலிகாப்டரில் இருந்து தேசியக்கொடிக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. சுதந்திர தினவிழாவில் பங்கேற்க, அங்கன்வாடி பணியாளர்கள், தெருவோர வியாபாரிகள் என பொதுவாகக் கவனிக்கப்படாத சமுதாயத்தின் ஹீரோக்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.

சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி டெல்லி செங்கோட்டை பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 10 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். செங்கோட்டையைச் சுற்றியுள்ள 5 கிலோ மீட்டர் பரப்பில், பட்டங்கள், ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.