இந்தியா

'தலைமை ஆசிரியர்களும் மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும்' - புதுச்சேரி கல்வித்துறை உத்தரவு

webteam

புதுச்சேரியில் அரசு பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்களும், மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக புதுச்சேரி கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் முதல்வர்கள், துணை முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் தங்களது வழக்கமான பள்ளி நிர்வாக பணிகளுடன், மாணவர்களுக்கு பாடம் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இந்த விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி: அதிகாரிகளின் அலட்சியம் - மீண்டும் மீண்டும் மயக்கமடைந்த மாணவி