இந்தியா

இந்தியா - சீனா மோதல் குறித்து விவாதிக்க ஜூன் 19ல் அனைத்துக் கட்சி கூட்டம்: பிரதமர் அழைப்பு

webteam

லடாக் மோதலை தொடர்ந்து இந்தியா சீனா இடையிலான எல்லைப் பிரச்னை குறித்து விவாதித்த பிரதமர் மோடி அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஜூன் 19ம் தேதி மாலை 5 மணிக்கு க்மெய்நிகர் கூட்டமாக இது நடைபெறும் என்று பிரதமர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லடாக் எல்லையில் நிகழ்ந்த தாக்குதல் குறித்து பிரதமர் மோடி மவுனம் காப்பதாக ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.