இந்தியா

மகாராஷ்டிராவில் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு: இரவு 12 மணி வரை உணவகங்கள் திறக்க அனுமதி

JustinDurai
மகாராஷ்டிராவில் நள்ளிரவு 12 மணி வரை அனைத்து உணவகங்களும் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், கூடுதல் தளர்வுகளை வழங்கி அம்மாநில அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி நள்ளிரவு 12 மணி வரை அனைத்து உணவகங்களும் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஏற்கெனவே அரசு அனுமதித்த நிறுவனங்களும் இரவு 11 மணி வரை இயங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.