முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகன்
முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகன் முகநூல்
இந்தியா

திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் வீட்டில் கட்டாக மூட்டைகளில் பணம் பறிமுதல்?.. 5வது நாளாக தொடரும் சோதனை!

PT WEB

முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் அடையாறில் உள்ள ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் ஜெகத்ரட்சகன்

மூன்றாவது நாள் சோதனையின்போது அங்கிருந்து பெரும் மதிப்பில் வெளிநாட்டு கரன்சிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. சவீதா மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் இருந்து மூட்டைகளில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 5ஆம் தேதி முதல் ஜெகத்ரட்சகனின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அவருக்கு தொடர்புடைய 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்ட நிலையில், ஐந்தாவது நாளாக இன்றும் சோதனை தொடர்ந்து வருகிறது.