கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா நேற்று மைசூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். அதில் தனக்கு இருந்த தீயப் பழக்கத்தில் இருந்து தான் விடுபட்டது எப்படி என்பது குறித்தும் பகிர்ந்துள்ளார். இதனை அவர் கூறியது புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு முகாமை தொடக்கி வைத்துபோது உணர்ச்சிவசப்பட்டு பல்வேறு அறிவுறைகளை இளைஞர்களுக்கு வழங்கினார்.
புற்றுநோய் விழிப்புணர்வு முகாமில் சீத்தாரமையா " ஏறக்குறை 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாளைக்கு 40 சிகரெட்டுகள் வரைப் பிடிப்பேன். ஒரு முறை எனது நண்பன் வெளிநாட்டில் இருந்து ஒரு பெட்டி சிகரெட்டுகளை வாங்கி வந்தான். அது முழுவதையும் ஒரேநாளில் பிடித்துத் தள்ளிவிட்டேன். அப்போதுதான் எனக்கு குற்ற உணர்ச்சி ஏற்பட்டது. அன்றைய தினமே சிகரெட் பிடிப்பதை நிறுத்திவிட்டேன். இப்போது சிகரெட்டை விட்டு ஏறக்குறைய 31 ஆண்டுகள் ஓடிவிட்டது. இப்போதெல்லாம் சிகரெட் புகையைில் இருந்து வெளியேறும் வாசத்தை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை" என்றார் அவர்.
இதனை மேலும் தொடர்ந்த சித்தராமையா " பொதுவாகவே தீய பழக்கவழக்கங்களுக்கு இளைஞர்கள் எளிதில் அடிமையாகிவிடுவார்கள். ஆனால் அப்படி யாரும் சிக்கிக் கொள்ள வேண்டாம். அதிலும் சிகரெட் பிடிக்கும் பழக்கம் மிக மோசமானது. சிகரெட் புகைத்துக்கொண்டிருக்கும் இளைஞர்கள் இப்போதே அந்தப் பழக்கத்தை கைவிட்டுவிடுங்கள். எனவே புற்றுநோய் உருவாகும் முன்பே புகைப்பதை நிறுத்தி விடுங்கள்" என இளைஞர்களை கேட்டுக்கொண்டார்.