இந்தியா

“போராடும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்பேன்” - ஹாலிவுட் நடிகை சூசன் சரண்டன்

Veeramani

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஹாலிவுட் நடிகை சூசன் சரண்டன் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

இரண்டு மாதங்களுக்கும் மேலாக டெல்லி எல்லைகளில் தொடர்ந்து முற்றுகையிட்டுள்ள விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவான கருத்துகளை பதிவிட்ட முதல் சர்வதேச நட்சத்திரங்களில் ரிஹானா, லில்லி சிங் மற்றும் ஜே சீன் ஆகியோர் அடங்குவர். இப்போது சூசன் சரண்டன் மற்றும் ஜமீலா ஜமீல் ஆகியோரும் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிக்கும் ட்வீட்டை ஹாலிவுட் நட்சத்திரம் சூசன் சரண்டன் இன்று பகிர்ந்துள்ளார். "இந்தியாவில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக நிற்கிறேன். அவர்கள் யார், ஏன் அவர்கள் போராடுகிறார்கள் என்பதைப் படியுங்கள் ”என்று நியூயார்க் டைம்ஸ் அறிக்கையின் இணைப்பினை பகிர்ந்து சரண்டன் பதிவிட்டிருக்கிறார்.