இந்தியா

புதுச்சேரி: கார்கில் நினைவிடத்தில் ராணுவ வீரரின் தலைகவசம் மாயம்

கலிலுல்லா

புதுச்சேரி கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள கார்கில் போர் நினைவிடத்தில் வைக்கப்பட்டிருந்த ராணுவ வீரரின் தலைகவசம் காணாமல்போனது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கார்கில் போரில் வீரமரணம் அடைந்தவர்களின் நினைவாக தலைமை செயலகம் அருகே நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வைக்கப்பட்ட துப்பாக்கியின் மீது இருப்பினால் செய்யப்பட்ட தலைக்கவசம் வைக்கப்பட்டிருக்கும். அந்த தலைக்கவசம் காணாமல்போன நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.