இந்தியா

டெல்லியில் கடும் பனிமூட்டம் : வாகன ஓட்டிகள் அவதி

webteam

 தலைநகர் டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவியதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். 

டெல்லியில் கடந்த சில நாட்களாகவே காலை மற்றும் இரவு நேரங்களில் அதிகமான பனிமூட்டம் காணப்படுகிறது. இந்நிலையில் இன்று இந்தியா கேட், ராஜபாதை ஆகிய பகுதிகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். டெல்லி விமான நிலையத்தில் மட்டும் 200 மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ளதை காண முடியாத அளவுக்கு பனிமூட்டம் இருந்துள்ளது. நடப்பு ஆண்டில் இருந்து இன்று அதிகப்பட்ச பனிமூட்டம் நிலவியதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.