இந்தியா

சபரிமலையில் பரவலாக கனமழை; தரிசனத்துக்கு சென்ற பக்தர்கள் அவதி

நிவேதா ஜெகராஜா

சபரிமலையில் பெய்த கனமழை காரணமாக, ஐயப்ப பக்தர்கள் அவதியடைந்தனர்.

சபரிமலையில் கடந்த ஒரு மாதமாகவே பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில், சபரிமலை சன்னிதானம் மற்றும் பம்பா, சரங்கொத்தி, பாண்டி தாவளம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. இதனால் பக்தர்கள் செல்லும் வழியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், தரிசனத்திற்கு செல்பவர்கள் அவதியடைந்தனர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால், குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது.