இந்தியா

பீகார்: மருத்துவமனைக்குள் புகுந்த மழை வெள்ளம்; நோயாளிகள் அவதி

JustinDurai

பீகாரில் பெய்த கனமழையால் தர்பங்கா மருத்துவமனைக்குள் வெள்ளம் புகுந்தது.

தர்பங்கா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றிரவு பெய்த கனமழையால் மருத்துவமனையை வெள்ளம் சூழ்ந்தது. மருத்துவமனைக்குள் மழை நீர் புகுந்தது. நோயாளிகளின் படுக்கைகளுக்கு கீழே நீர் தேங்கியது. இதனால், மருத்துவர்கள், நோயாளிகள், செவிலியர்கள் என அனைவரும் அவதியடைந்தனர்.