இந்தியா

டெல்லியில் பலத்த மழை: பாலத்து நீரில் சிக்கிக்கொண்ட பேருந்து - வீடியோ!

webteam

இன்று அதிகாலை முதலே டெல்லியில் இடியுடன் கூடிய மழை பெய்துவருகிறது. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரில் வாகனங்கள் சிக்கிக்கொண்டன. மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

டெல்லிக்கு அருகிலுள்ள ஆதம்பூர், ஹிசார், பரூட், ரோஹ்தக், சோனிபட், குருகிராம், நோய்டா, காசியாபாத் மற்றும் பரிதாபாத் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனத்த மற்றும் மிதமான மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.  

காலையில் பெய்த தொடர் மழையால் சாலைகள் மற்றும் சுரங்கப் பாதைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் அதிகாலை 5.30 மணி வரையில் 4.9 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இந்நிலையில் டெல்லி கனமழையால் பாலம் ஒன்றின் கீழ் தேங்கியிருந்த நீரில் பேருந்து ஒன்று சிக்கிக் கொண்டது. பின்னர் தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் பயணிகளை அதிரடியாக மீட்டனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.