இந்தியா

நீண்ட கால நன்மைக்கு, குறுகிய கால வலி இருக்கும்: வெங்கய்யா பேச்சு

webteam

நாட்டின் நீண்ட கால நலனுக்காக குறுகிய கால சிரமங்களை சந்திக்க வேண்டியிருப்பதாக குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார். பொருளாதார வளர்ச்சி குறைந்திருப்பது குறித்து கருத்து தெரிவித்தபோது இதை அவர் கூறினார். 
டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், உலகப் பொருளாதாரம் மந்தநிலை அடைந்திருப்பதாகவும் சீனாவின் வளர்ச்சியும் குறைந்திருப்பதாகவும் கூறினார். சிலர் நாட்டுக்காக என்ன செய்தோம் என்றே சிந்திக்காமல், தங்கள் திறமையை விவாதிப்பதிலேயே செலவிடுவதாகக் கூறிய வெங்கய்யா நாயுடு, இனி என்ன செய்ய வேண்டுமோ அதுபற்றி சிந்திக்க முன்வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.