குஜராத் மாநில பள்ளிகளில் இந்த வருட தொடக்கத்தில் இருந்து, மாணவ- மாணவிகள் 'உள்ளேன் ஐயா' என்பதற்குப் பதிலாக, ’ஜெய்ஹிந்த்’ என கூற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
குஜராத் மாநில ஆரம்பக் கல்வி மற்றும் மேனிலைப்பள்ளி கல்வி வாரியம் நேற்று அறிவிப்பு ஒன்றை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள் ளது. அதன்படி, மாநிலம் முழுவதுமுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்,
1ஆம் வகுப்பு முதல்12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள், வருகை பதிவின்போது ’உள்ளேன் ஐயா’ என சொல்வதற்குப் பதிலாக ’ஜெய்ஹிந்த்’ அல்லது ’ஜெய் பாரத்’ என்று கூற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.