இந்தியா

கோவா: இளைஞர் காங்கிரஸ் கால்பந்து போட்டியை தொடங்கி வைத்த ராகுல்காந்தி

Veeramani

கோவாவின் தலிகோவில் இளைஞர் காங்கிரஸ் கால்பந்து போட்டியை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தொடங்கி வைத்தார்.

40 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கோவா சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், அனைத்து கட்சிகளும் தங்களின் பிரசாரத்தை தொடங்கியுள்ளன. இந்த சூழலில் கடந்தமுறை தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்றிருந்த காங்கிரஸ், இம்முறை வெற்றிபெறும் முனைப்புடன் தேர்தல் பணிகளை செய்து வருகிறது.