பெட்ரோல் டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது
ஒருபுறம் இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருந்தாலும், மறுபுறம் சத்தமே இல்லாம அதிகரித்துக்கொண்டு இருக்கிறது பெட்ரோல் மற்றும் டீசல் விலை. பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து ஏறு முகத்தில் மட்டுமே உள்ளது. கொரோனா போன்ற இக்கட்டான காலகட்டத்தில் பெட்ரோல், டீசல் விலைய தினம் தினம் அதிகரிப்பது சாமானிய மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று சென்னையில் பெட்ரோல் விலை 81.82 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது நேற்றைய விலையை விட 50 காசுகள் அதிகம். அதேபோல் டீசல் விலை 74.77 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையை விட 54 காசுகள் அதிகமாகும். கடந்த 13 நாள்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு லிட்டருக்கு 6 ரூபாய் 28 காசுகளும், டீசல் லிட்டருக்கு 6 ரூபாய் 55 காசுகளும் உயர்ந்துள்ளன.