இந்தியா

சென்னை துறைமுகம் பெயரில் மோசடி - சொத்துக்கள் முடக்கம்

EllusamyKarthik

துறைமுகம் பெயரில் போலி வங்கிக்கணக்கு தொடங்கி மோசடி செய்த புகாரில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 

சென்னை துறைமுகம் பெயரில் ரூ.45 கோடி மோசடி புகாரில் ரூ.5.74 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. மேலும், 230 ஏக்கர் நிலம், 20 மனைகள், வங்கி டெபாசிட் என 47 சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.