முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தவர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ். வயது 88. இவர் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் இன்று காலமானார். இத்தகவலை அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் மறைவிற்கு பல அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இவர் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தபோது தான் கார்கில் போர் நடைபெற்றது. அத்துடன் தனி ஈழம் அமைய வேண்டும் என பேசியவர் என்பது குறிப்பிடத்தக்கது.