இந்தியா

‘தலிபான்’,‘ஹிட்லரின் பரம்பரை’-என ஆளும் பாஜக தலைவர்களை சாடிய சித்தராமையா!

EllusamyKarthik

கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் அந்த மாநிலத்தின் பாஜக தலைவர்களை ‘தலிபான்’, ‘ஹிட்லரின் பரம்பரை’ என சாடி உள்ளார் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான சித்தராமையா. 

“பாஜக பொய்களுக்கான தொழிற்கூடம். அவர்கள் பொய்களை உற்பத்தி செய்து, அதனை சந்தைப்படுத்துதலில் வல்லவர்கள். ஹிட்லரின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமைச்சரும், NAZI கட்சியின் கொள்கை பரப்பு செயலாளருமான கோயபெல்ஸ் எந்த அளவு பொய்களை பரப்புவதில் வல்லவரோ. அது போல பாஜக தலைவர்களும் பொய்களை பரப்புவார்கள்.

கொள்ளை புறமாக ஆட்சி அமைத்தவர்கள். அவர்களுக்கு மக்களின் ஆதரவு துளியும் இல்லை. கர்நாடகத்தில் பாஜக பெயரில் ஆட்சி நிர்வாகத்தை ஆர்.எஸ்.எஸ் நடத்தி வருகிறது” என தெரிவித்துள்ளார் சித்தராமையா. 

எளியவர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்வில் இதனை தெரிவித்துள்ளார் அவர். மேலும் அவர் வேலையில்லா திண்டாட்டத்தை மேற்கோள் காட்டி பிரதமர் மோடியையும் சாடி இருந்தார்.