ஆந்திரா சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்த ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெறும் 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த சூழலில், வரும் 24ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுவதையொட்டி பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்க வேண்டுமென ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
ஏற்கனவே, ஜெகன்மோகன் ரெட்டியின் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், அவரை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க முடியாது என சபாநாயகர் அய்யனா பத்ருடு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியின்போது 3 உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்த பாஜகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டி ஜெகன்மோகன் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர் ஆந்திரா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.