heavy rain pt
இந்தியா

இந்தியாவின் பல பகுதிகளில் ஆட்டம் காட்டும் மழை...14 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள்!

இந்தியாவின் பல பகுதிகளில், குறிப்பாக வடமாநிலங்களில் பருவமழை ஆட்டம் காட்டி வருகிறது. இதனால், 14க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும், பலரை காணவில்லை என்றும் அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. இதுகுறித்த தகவல்களை காணலாம்.

ஜெனிட்டா ரோஸ்லின்

கேரளாவில் மூன்று மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. அங்கு பலத்த மழை பெய்து பல தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் அடித்து செல்லும் காட்சிகளை காண முடிகிறது.

மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் மத்தியப்பிரதேசத்தின் பல பகுதிகளில் பலத்த மழைப்பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இமாச்சலப்பிரதேசத்தின் காங்க்ரா மற்றும் குலு மாவட்டங்களில் கடந்த 25 ஆம் தேதி ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக, தீடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இமாச்​சலின் தரம்​சாலா பகு​தி, கன்னி​யாரா கிராமத்​தில் நீர்​மின் நிலைய கட்​டு​மான பணி​கள் நடை​பெறுகின்​றன. இங்கு பணி​யில் ஈடு​பட்​டிருந்த சுமார் 20 தொழிலா​ளர்​கள் வெள்​ளத்​தில் அடித்​துச் செல்​லப்​பட்​டனர். இதில் 4 பேரின் சடலங்​கள் மீட்​கப்​பட்டு உள்​ளன. மீத​முள்ள 16 பேரை தேடும் பணி தொடர்ந்து நடை​பெறுகிறது.

இமாச்சல பிரதேசத்​தின் பல்​வேறு சுற்​றுலா தலங்​களை வெள்​ளம் சூழ்ந்​துள்​ளது. அந்த பகு​தி​களில் சிக்​கித் தவிக்​கும் சுமார் 2,000-க்​கும் மேற்​பட்ட சுற்​றுலா பயணி​களை பத்​திர​மாக மீட்க முயற்சி மேற்​கொள்​ளப்​படு​கிறது.

உத்​த​ராகண்ட் மாநிலத்​தில் கடந்த சில நாட்​களாக பலத்த மழை பெய்து வரு​கிறது. இதனால் மலைப் பகுதி சாலைகள் மிகக் கடுமை​யாக சேதமடைந்து உள்​ளன. கேதார்நாத் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டநிலையில், சுமார் 1300 சுற்றுலா பயணிகள் வெள்ளத்தில் சிக்கினர். இவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக்குழு இறங்கியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் ரஜோரி, பூஞ்ச், தோடா பகு​தி​களில் நேற்றைய தினம் (26.6.2025) மேகவெடிப்பு ஏற்​பட்டு கனமழை பெய்​தது. இந்தப் பகு​தி​களில் காட்​டாற்று வெள்​ளத்​தில் 7 பேர் அடித்​துச் செல்​லப்​பட்​டனர். இதில் ரஜோரியை சேர்ந்த 3 பேர் சடலங்​களாக மீட்​கப்​பட்​டனர். 4 பேர் உயிருடன் மீட்​கப்​பட்​டனர்.

தொடர்ந்து, அருணாச்சலப் பிரதேசத்தில், பிச்சோம் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் கடந்த செவ்வாய்க்கிழமை (24.6.2025) சச்சுங் கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கி ஒருநபர் உயிரிழந்தார். கனமழையைத் தொடர்ந்து பச்சுக் ஆற்றில் மற்றொருவர் அடித்துச் செல்லப்பட்டதாக மாநில அவசர செயல்பாட்டு மையத்தின் (SEOC) அறிக்கை வெளியிட்டுள்ளது . இதன் மூலம், வடகிழக்கு மாநிலத்தில் பருவமழை தொடர்பான பேரழிவுகளால் ஏற்பட்ட உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது

இப்படி இந்தியாவின் பல பகுதிகளில் பருவமழை ஆட்டம் காட்டி வருகிறது.