இந்தியா

50 அடி ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியுள்ள சிறுமி: மீட்கும் பணி தீவிரம்

webteam

ஹரியானா மாநிலத்தில், 50 அடி ஆழ்துளைக் கிணற்றில் 5 வயது சிறுமி தவறி விழுந்தாள். கர்னால் மாவட்டத்தில் உள்ள ஹர்சிங்புரா கிராமத்தில் நேற்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்றுள்ள தீயணைப்புப் படையினர் சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆழ்துளைக் கிணற்றின் அருகே, பொக்லைன் இயந்திரங்கள் உதவியு‌டன் மிகப்பெரிய பள்ளம் தோண்டி சிறுமியை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 50 அடி ஆழத்தில் சிக்கியுள்ள சிறுமிக்கு தொடர்ந்து ஆக்சிஜன் அளிக்கப்படுகிறது.

மீட்கப்பட்டவுடன் சிகிச்சை அளிக்க மருத்துவக் குழுவினரும் தயாராக உள்ளனர்.