இந்தியா

பெங்களூரில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி

webteam

பெங்களூரில் உள்ள தனியார் மதுவசதி ரெஸ்டாரண்டில் மின்கம்பி அறுந்து 5 ஊழியர்கள் உயிரிழந்தனர்.

பெங்களூரில்  கைலாஷ் என்ற தனியார் ரெஸ்டாரண்ட் உள்ளது. இதில் இன்று அதிகாலை எதிர்பாராத விதமாக மின்கம்பி அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ரெஸ்டாரண்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த சுவாமி (23), பிரசாத் (20), மகேஷ் (35), மஞ்சுநாத் (45), கீர்த்தி (24) என்ற 5 ஊழியர்கள் மின்சாரம் தாக்கி உயிழந்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்பு மீட்புப்படையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். அத்துடன் அவர்கள் மேற்கொண்ட ஆய்வில், அந்த ரெஸ்ட்ராண்டில் தீவிபத்து முன்னெச்சரிக்கை வசதிகள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் தப்பி ஓடிய ரெஸ்ட்ராண்ட் நிறுவனரையும் தேடி வருகின்றனர்.